×

குறைதீர் நாள் கூட்டத்தில் 248 மனுக்கள் குவிந்தன

கிருஷ்ணகிரி, பிப்.13: கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 248 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய, 248 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சரயு, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், ₹45 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வீதம் 9 பயனாளிகளுக்கு ₹4.05 லட்சம் மதிப்பிலான 72 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் சாதனைக்குறள், தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயிணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குறைதீர் நாள் கூட்டத்தில் 248 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : Grievance Day ,Krishnagiri ,People's Grievance Redressal Day ,Krishnagiri District ,Collector ,Sarayu ,Dinakaran ,
× RELATED வெளி மாநில மது விற்ற 42 பேர் மீது வழக்குபதிவு